News Just In

6/30/2025 08:32:00 AM

மட்டக்களப்புக்கு விவசாய. அமைச்சர் வருகிறார் விவசாயிகளின் பிரச்சனைகள்.தீர்க்க நடவடிக்கை

மட்டக்களப்புக்கு விவசாய. அமைச்சர் வருகிறார் விவசாயிகளின் பிரச்சனைகள்.தீர்க்க நடவடிக்கை



(மட்டக்களப்புமொகமட் தஸ்ரிப் லத்தீப்)
மட்டக்களப்பு மாவட்டத்தில். விவசாயிகள் நீண்ட காலமாக எதிர் நோக்கி வரும். நீண்ட கால பிரச்சனைகளுக்கு. தீர்வு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 22ஆம் தேதி. மாவட் டத்தின் விவசாயிகளின் அபிவிருத்தி நடவடிக்கைகளை கருதிக் கொண்டு. விவசாய நீர்ப்பாசன வன ஜீவராசிகள் அமைச்சர். லால்காந்த இம் மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன் றினை மேற்கொள்ள வுள்ளார்.

இதன்போது இம் மாவட்டவிவசாய மக்களின் பிரச்சினைகள் முன் வைக் கப்பபட்டு அதற்கான தீர்வுகளும் அன்று பெற்றுக் கொடுக்கப் படும் என மாவட்ட அரசாங்க அதிபர். மட்டக்களப்பு மாவட்ட அர சாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் பழைய மாவட்ட செயலகத் தில் நடைபெற்ற மாவட்ட விவசாய அபிவிருத்தி குழு கூட்டத்தின் போது. இத்தகவல்வெளியிடப்பட்டது.இம்மாவட்டத்தில்.அரசாங்க நிதியில் அமுல் நடத்தப்பட்டு வரும். விவசாயஅபிவிருத்தி திட்டங் களின் முன்னேற்றம் பற்றி இங்கு கலந்துரையாடப்பட்டது.

இந்த மாவட்ட விவசாய அபிவிருத்தி குழு கூட்டத்தில். இம்மாட்ட விவசாயி கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள். நீர்ப்பாசனம். மற் றும் மானிய உர விநியோகம்,விதை நெல். மற்றும் மர முந்திரி கை ச் செய்கை தென்னை. அபிவிருத்தியில் குறித்த விவசாயிகள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் பற்றியும் இங்கு ஆராயப்பட்டது.

அத்துடன் மாவட்டத்தில் பெரும் பிரச்சினையாக உள்ள காட்டு யானை தொல்லையை கட்டுப்படுத்துவதற்கு எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் இங்கு ஆராயப் பட்டது. விவசாய காப்புறுதி நடவடிக்கைகளிள் உள்ள குறைபாடு களும் இங்கு விரிவாக ஆராயப் பட்டன.

இது தவிர விவசாயம் மரம் முந்திரியை தென்னை அபிவிருத்தி. கால்நடை உற்பத்தி சுகாதாரம். நீர்ப்பாசனம் மற்றும்பல்வேறு விவசாயம் சார்ந்த திணைக்களங்களின் முன்னேற்றங் கள் பற்றி யும்இங்கு ஆராயப்பட்டன.

. மாவட்ட விவசாய அமைப்புகள் முன்வைத்த கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட மாவட்ட அரசாங்க அதிபர். யஸ்டினா முரளி தரன். விரைவில் மாவட்டத்திற்கு விவசாய. விவசாய அபிவிருத்தி அமைச் சர் வருகை தர இருப்பதால் இந்த பிரச்சனைகள். நேரடி யாக முன்வைக்கப்பட்டு அதற்கான தீர்வுகளும் பெற்று தரப்படும் என இங்கு தெரிவித்தார்.

மேலும். மாவட்டத்திற்கு விவசாய அமைச்சர் நேரடியாக வருகை இரு ப்பதால். மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் எதிர்நோக்கும் தமது பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வதற்கு. கோரிக்கைகளை எழுத்து வடிவில் தத்தமது பிரதேச செயலாளராக சமர்ப்பிக்கும் இடத்தில். இலகுவாக அமைச்சரிடம் இருந்து தீர்வுகளை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்

No comments: