News Just In

4/10/2025 11:15:00 AM

யாழில் 35 வருடங்களின் பின் திறந்து வைக்கப்பட்ட வீதி...! உச்சக்கட்ட கட்டுப்பாடுகள்!

யாழில் 35 வருடங்களின் பின் திறந்து வைக்கப்பட்ட வீதி...! உச்சக்கட்ட கட்டுப்பாடுகள்


யாழ்ப்பாணத்தில்  இராணுவ அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த வீதி 35 வருடங்களின் பின் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பலாலி வீதியில் வசாவிளான் சந்தியில் இருந்து பருத்தித்துறை - பொன்னாலை வீதியுடன் இணையும் பலாலி சந்தி வரையான 2.5 கிலோமீற்றர் நீளமான வீதியே இவ்வாறு முழுமையாக இன்று காலை 6.00 மணியளவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தின் ஊடாக செல்லும் சுமார் 2.5 கிலோ மீற்றர் நீளமான குறித்த வீதியானது கடந்த 1990ஆம் ஆண்டு முதல் மக்கள் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த வீதியானது இன்றைய தினம் வியாழக்கிழமை முதல், பல்வேறு நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் மக்கள் போக்குவரத்திற்காக திறந்து விடப்பட்டப்பட்டுள்ளது.

இதன்போது அந்த வீதியில் பயணிப்பதற்கு பல்வேறு நிபந்தனைகள் வருமாறு,

1. வீதி திறக்கப்படும் நேரம் மு.ப 06.00 தொடக்கம் பி.ப 05.00 வரை மாத்திரமே.

2. வீதியினுள் பயணிக்கும் வாகனங்கள் இடையில் நிறுத்துதல், திருப்புதல் தடை செய்யப்பட்டுள்ளது.

3. வீதியில் பயணிக்கும் சந்தர்ப்பத்தில் வீதியின் இருபுறமும் புகைப்படம் எடுத்தல் ஒளிப்பதிவு செய்தல் போன்றவை தடை செய்யப்பட்டுள்ளது.

4. இந்த வீதியில் நடைபயணங்கள் தடைசெய்யப்பட்டுள்ளது.

5. இந்த வீதியில் பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் தவிர்ந்த ஏனைய பாரவூர்திகள் பயணிக்கத் தடை.

6. இந்த வீதியில் செல்லக்கூடிய வேகம் ஆகக்கூடியது 40 கி.மீ மாத்திரமே.

6. இந்த வீதியில் பயணிக்கும் சாரதிகள் மற்றும் அனைவரும் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளக்கூடிய ஆவணங்களை பயணத்தின் போது வைத்திருத்தல் அவசியமாகும்.

மேற்குறிப்பிட்ட அறிவுறுத்தல்களை மீறுதல் சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளக் கூடிய குற்றமாகும்

No comments: