வான வேடிக்கைகளுடன் வரவேற்கப்பட்ட புத்தாண்டு - நாடளாவிய ரீதியில் விசேட நிகழ்வுகள்
2025ஆம் ஆண்டினை வரவேற்கும் வகையில் நாடளாவிய ரீதியில் இன்று நள்ளிரவு பூஜைகளும் ஆராதனைகளும் நடைபெற்றன.
அந்தவகையில், வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் ஆங்கிலப் புத்தாண்டு தொடக்கத்தின் போது தீபங்கள் ஏற்றப்பட்டுள்ளன.
இன்று நள்ளிரவு 12 மணிக்கு இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இதன்போது, 2025ஆம் ஆண்டு பிறந்த நேரத்தில், நல்லூர் கந்தசுவாமி ஆலய தேரடியில் தீபங்கள் ஏற்றப்பட்டு புத்தாண்டு வரவேற்கப்பட்டுள்ளது.
No comments: