News Just In

10/28/2024 07:13:00 PM

விசேட தினமாக நவம்பர் 03 திகதி அறிவிப்பு!


விசேட தினமாக நவம்பர் 03 திகதி அறிவிப்பு!


எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை விநியோகிக்கும் விசேட தினமாக நவம்பர் 03 (ஞாயிற்றுக்கிழமை) அறிவிக்கப்பட்டுள்ளது

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்தார்.

அதன்படி நவம்பர் 3 ஆம் திகதி இவ்வாறு பெயரிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்ற தேர்தலின் கொழும்பு மற்றும் வன்னி மாவட்டங்களில் உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டு விநியோகம் இன்று ஆரம்பமாகியுள்ளது.

அதற்காக சுமார் 8,000 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்

No comments: