News Just In

7/04/2024 01:41:00 PM

வைத்தியர் கேதீஸ்வரன் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!



யாழ். சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் நியமனம் தொடர்பில் பெரும் சர்ச்சைநிலை ஏற்பட்டிருந்தது.

இதற்கு பதிலடி வழங்கும் விதமாக அவர் வெளியிட்டுள்ள காணொளி பதிவானது யாழில், இடம்பெறும் அரச வைத்தியதுறையின் ஊழல் செயற்பாடுகளை அம்பலப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

தெற்கிலிருக்கும் சிங்கள அரசாங்கம் வடக்கு மக்களுக்கு ஒழுங்கற்ற விதத்தில் மருத்துவ வசதிகளை வழங்குகிறது என்ற பொய்யை நிரப்புவதற்காகவே யாழ். மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் பகடைக்காயாக செயற்படுவதாகவும் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

சாவகச்சேரி, மற்றும் தெல்லிப்பழை ஆதார ஆதார வைத்தியசாலைகளில் மரணிக்கும் ஒருவரின் உடலை யாழ் போதனாவைத்தியசாலைக்கு அனுப்பி இழுத்தடிப்பு செய்வதாகவும், இதன் காரணமாக பொதுமக்கள் பணத்தை வழங்கியே உடலை பெற்றுக்கொள்ளவேண்டிய நிலை காணப்படுவதாகவும் அதிர்ச்சி தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆபத்தான மருந்துவகைகளை கடத்தியும், அவற்றை வடக்கில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு வழங்கியும் மனநோயை ஏற்படுத்து விதமாக ஆ.கேதீஸ்வரன் செயற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments: