News Just In

6/28/2024 04:31:00 PM

சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட ஹிருணிக்கா!




மூன்று வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர, கொழும்பு மேல் நீதிமன்றில் இருந்து சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதன் பின்னர் அவரது கைவிரல் அடையாளம் பதிவு செய்யப்பட்டது.

அதன் பின்னர் அவர் சிறைச்சாலை அதிகாரிகளால் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அதேநேரம், இந்தத் தீர்ப்புக்கு எதிராக எதிர்வரும் திங்கட்கிழமை (01) மேன்முறையீடு செய்யவிருப்பதாக ஹிருணிக்காவின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.










No comments: