News Just In

6/03/2024 04:35:00 PM

மயிலத்தமடு - மாதவனை போராட்டத்தில் கைதான பல்கலைக்கழக மாணவர்கள் விடுதலை!




மட்டக்களப்பு மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் தரை சிங்கள ஆக்கிரமிப்புக்கு எதிராக கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 05ஆம் போராட்டத்தில ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (03) ஏறாவூர் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டனர்.

இலங்கை பாதுகாப்புத் துறை போதிய சாட்சியங்களை முன்வைக்கத் தவறியமை, குற்றப்பத்திரிகையில் காணப்பட்ட முரண்பாடு, மேலும் குற்றச்சாட்டுக்களை முன்கொண்டு செல்வதற்கான எவ்வித முகாந்தரங்களும் இல்லை எனும் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்ட மாணவர்கள் 06 பேரும் ஏறாவூர் நீதிமன்றத்தினால் இன்றைய தினம் விடுதலை செய்யப்பட்டனர்

No comments: