News Just In

6/01/2024 07:04:00 PM

வட மாகாணத்தில் இருந்து அதிகளவான மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தகுதி!





இம்முறை கல்வி பொது தராதர உயர் தர பரீட்சையில் தோற்றிய மாணவர்களில் 64.3 வீதமான மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்தது.

2023 ஆம் ஆண்டிற்கான கல்வி பொது தராதர உயர் தர பரீட்சைக்கான பெறுபேறுகள் நேற்று (31) வெளியாகின.

இம்முறை க.பொ.த உயர் தர பரீட்சையில் 269,613 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர். இவர்களில் 173,444 பேர் பல்கலைகழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் அதிகளவானோர் வட மாகாணத்தில் பதிவாகியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பரீட்சை மீளாய்வுகளுக்காக எதிர்வரும் 5 ஆம் திகதி தொடக்கம் 19 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியுமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, 2023 கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வௌியிட எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

No comments: