News Just In

4/27/2024 01:33:00 PM

மைத்திரியின் இரகசிய வாக்குமூலம் அம்பலம்!





உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன(Maithripala sirisena) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வழங்கிய இரகசிய வாக்குமூலம் தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்(Tiran Alles) இன்று தகவல் வெளியிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூளையாக செயல்பட்டவர் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்கிய இரகசிய வாக்குமூலம் தொடர்பிலேயே பொது பாதுகாப்பு அமைச்சர் முதன்முறையாக தகவல் வெளியிட்டுள்ளார்.

மைத்திரியின் இரகசிய வாக்குமூலத்தில் இலங்கையை சேர்ந்த எவருடைய பெயரையும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிடவில்லை குறிப்பிடவில்லை என அமைச்சர் டிரான் அலஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments: