வெடுக்குநாறிமலை விடயத்தில் இந்தியா பாராமுகமாக செயற்படுவதாக பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் தெரிவித்துள்ளார்.
வெடுக்குநாறிமலை விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
வெடுக்குநாறிமலை விடயம் தொடர்பில் இந்தியா அமைதிக்காத்துள்ளமை, தமிழ் இன அழிப்பிற்கு துணைபோயுள்ளதாக கருதப்படலாம் எனவும், நிச்சயமாக இந்திய அரசின் அறிக்கை வெளியாக வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
வெடுக்குநாறிமலையை கையகப்படுத்தும் நடவடிக்கையில் பௌத்த தேரர்கள் தீவிரமாக செயற்பட்டு வருவதாகவும், இதன் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பின் வடிவமே இந்துக்கள் மீதான அடாவடித்தனம் என்றும் கூறியுள்ளார்.
No comments: