News Just In

3/14/2024 08:30:00 PM

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் யுத்திய பரிசோதனையின் திடீர் நடவடிக்கை முன்னெடுப்பு.!


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் களுதாவளையில் வைத்து களுவாஞ்சிகுடி பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து, யுத்திய சுற்றி வளைப்பு பரிசோதனையின் ஒரு அங்கமாக திடீர் பரிசோதனை நடவடிக்கைகளை வியாழக்கிழமை(14.03.2024) முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகள், உள்ளிட்ட வாகனங்களை பரிசோதனை செய்யப்பட்டதுன், பயணிகள் இறக்கப்பட்டு மோப்ப நாய்களுடன் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

நாடாளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் போதைப்பொருளை சுற்றிவளைப்புக்களைத் தொடர்ந்து இதன்போது களுதாவளையிலும் இந்த யுக்திய சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதில் பரிசோதனை செய்யப்பட்ட வாகனங்களுக்கு பொலிஸாரால் போதைப்பொருள் தடுப்பதற்கான, இஸ்ரிக்கர்களும் ஒட்டப்பட்டன.



No comments: