News Just In

3/29/2024 11:39:00 AM

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இப்தார் நிகழ்வு!



நூருல் ஹுதா உமர்
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீட புவியியல் துறை மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த புனித ரமழான் இப்தார் நிகழ்வு 2024.03.28 ஆம் திகதி பல்கலையின் கடற்கரை மணலில் இடம்பெற்றது.

கலை கலாசார பீட புவியியல் துறை பல்லின மாணவர்கள் பங்குகொண்ட இந்நிகழ்வில் கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில், பூவியியல் துறைத் தலைவர் கே. நிஜாமிர், சிரேஷ்ட பதிவாளர் எம்.ரீ. அஷ்ஹர் உள்ளிட்டவர்களுடன் திணைக்கள தலைவர்கள் மற்றும் விரிவுரையாளர்களும் கலந்து கொண்டனர்.

No comments: