இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா நேற்று (13) ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவை சந்தித்தார்.
இருதரப்பு உறவுகள், அரசியல் முன்னேற்றங்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பசில் ராஜபக்ஷ, வரவிருக்கும் தேர்தலுக்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தயாராகி வருவதாகக் கூறியிருந்தார்.
இந்தியத் தூதருடனான சந்திப்பிற்கு முன்னதாக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும் பசில் ராஜபக்ஷ சந்தித்துப் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments: