நாடளாவிய ரீதியில் பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கும் பாலியல் தொல்லை கொடுப்பவர்களை கண்டறியும் விசேட நடவடிக்கையை நேற்றையதினம் பொலிஸார் முன்னெடுத்தனர்.
இதன்போது பாலியல் பாலியல் தொல்லைகொடுத்தவர்கள் உள்ளிட்ட 42 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் நேற்று புதன்கிழமை (07) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களில் பாலியல் தொல்லைகள் கொடுத்த 18 பேரும், பணப்பை திருட்டில் ஈடுபட்ட 5 பேரும் அடங்குவார்கள்.
பொதுப்போக்குவரத்து சேவைகளில் இவ்வாறான சம்பவங்களை கட்டுப்படுத்த சிவில் உடை அணிந்த பல பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
No comments: