News Just In

1/19/2024 01:03:00 PM

இந்தியாவில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 மாணவர்கள் உட்பட 16 பேர் உயிரிழப்பு!

இந்தியாவின் குஜராத்தில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 மாணவர்கள் உட்பட 16 பேர் உயிரிழந்தாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

விபத்து சம்பவம் நேற்று (18.1.2023) பிற்பகல் குஜராத் - வதோதரா புகா் பகுதியில் உள்ள ஹா்ணி ஏரியில் இடம்பெற்றுள்ளது.

படகில் 27 மாணவர்கள் பயணம் செய்ததாக தெரிவிக்கப்படும் நிலையில் அவர்களில் யாரும் பாதுகாப்பு ஜெக்கெட் அணியவில்லை என்றும் கூறப்படுகின்றது.

இந்தியாவில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: 14 மாணவர்கள் பரிதாப உயிரிழப்பு | 14 Students 2 Teachers Death Board Accident India

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில், இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் வதோதரா புகா் பகுதியில் உள்ள ஹா்ணி ஏரிக்கு 4 ஆசிரியா்கள் தலைமையில் 24 பள்ளி மாணவா்கள் சுற்றுலா சென்ற படகு எதிா்பாராதவிதமாக ஏரியில் கவிழ்ந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, அப்பகுதியில் இருந்தவா்கள் தீயணைப்புப் படையினர்கள் அங்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.

இந்த சம்பவத்தில் 14 பள்ளி மாணவா்களும், 2 ஆசிரியா்களும் உயிரிழந்துள்ளனர். ஒரு மாணவா் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

படகில் 24 மாணவா்கள் வரை இருந்த நிலையில், காணாமல் போன ஏனையவர்களை தேடும் பணி முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments: