News Just In

11/12/2023 06:58:00 PM

அரிசி மாபியா-கீரிச் சம்பாவின் விலையைக் குறைத்துள்ளன! விவசாய அமைச்சர்





சந்தையில் தற்போது கீரி சம்பா அரிசிக்கு பற்றாக்குறை நிலவுவதானது, அரிசி மாபியாவால் செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளது என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.நாட்டில் போதியளவு கீரி சம்பா அரிசி இருப்பு காணப்படுகின்றபோதும், சில அரிசி ஆலை உரிமையாளர்கள் கையிருப்பை மறைத்து சந்தைக்கு விநியோகிப்பதை குறைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

முன்னதாக கீரி சம்பா அறுவடை குறைவாக காணப்பட்ட போதிலும் கடந்த பெரும்போகத்தில் கீரி சம்பா அறுவடை செய்யப்பட்டதன் காரணமாக நெல் மற்றும் அரிசி இருப்பு குறையவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், அரிசியை பதுக்கிவைப்பவர்கள் தொடர்பில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைமையில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்படுவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த போகத்தில் அதிகளவு கீரி சம்பா அரிசியை பயிரிடுவதற்கு விவசாயிகளை ஊக்குவிக்குமாறும் அமைச்சர் விவசாய திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கீரி சம்பா அரிசிக்கு அரசாங்கம் கட்டுப்பட்டு விலையினை நிர்ணயித்த போதிலும், தற்போது கீரி சம்பா அரிசி 305 முதல் 310 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.இதனிடையே, பல வர்த்தகர்கள் இரகசியமான முறையில் அதிக விலைக்கு கீரி சம்பா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments: