
மட்டக்களப்பு கிரான் தரவையில் எதிர்வரும் 27ஆம் திகதி தங்களது உயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு விளக்கு ஏற்றுவதற்காக அமைக்கப்பட்டிருந்த தூபி பொலிஸாரால் தகர்த்தெறியப்பட்டுள்ளது.
குறித்த துபியை இன்று(23.11.2023) வாழைச்சேனை பொலிஸார் தகர்த்தெறிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சட்டத்துக்கு முரணாக தூபி அமைக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸாரால் நீதிமன்றத்தின் கட்டளையை பெற்று குறித்த தூபி தகர்த்தெறியப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments: