News Just In

11/21/2023 08:09:00 PM

இலங்கை கிரிக்கெட் குறித்து ஐ.சி.சியின் கட்டுப்பாடுகளில் தளர்வு: வெளியான புதிய அறிவிப்பு!




இலங்கை கிரிக்கெட், ஐ.சி.சியினால் இடைநிறுத்தப்பட்டாலும் இருதரப்பு கிரிக்கெட் மற்றும் ஐ.சி.சி போட்டிகளில் இலங்கை தொடர்ந்து சர்வதேச அளவில் போட்டியிடலாம் என ஐ.சி.சி பேரவை தெரிவித்துள்ளது.

அஹமதாபாத்தில் இன்று(21) நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கூட்டத்தின் போதே மேற்குறித்த தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு வழங்கப்படும் நிதியுதவி கடும் நிபந்தனைகளுடன் வழங்கப்படுமென அறிவித்துள்ளது.

மேலும் 2024ஆம் ஆண்டு இலங்கையில் நடாத்தப்படவிருந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி தென்னாபிரிக்காவுக்கும் மாற்றப்பட்டுள்ளதாகவும் ஐ.சி.சி அறிவித்துள்ளது.

No comments: