News Just In

11/23/2023 08:54:00 PM

குழந்தைகள் நல மருத்துவர் பெற்றோரிடம் விடுத்துள்ள அறிவித்தல் !


வைத்தியர்களின் ஆலோசனையின்றி நோய் எதிர்ப்பு மருந்துகளை பயன்படுத்துவதால், உயிர்வாழ்வுக்குத் தேவையான பக்டீரியாக்களும் மரணிக்கலாம் என குழந்தைகள் நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக மனிதன் 50 ஆண்டுகளுக்குள் மரணிக்கும் சாத்தியம் காணப்படுவதாகவும் “உலக எண்டிபயோடிக் விழிப்புணர்வு வாரம்” குறித்து கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நன்மை பயக்கும் பக்டீரியாக்கள் கொல்லப்படுகின்றன
நோயெதிர்ப்பு மருந்துகள் பக்டீரியாக்களை வலுவிழக்கச் செய்யும் என்றும், அதிகப்படியான நன்மை பயக்கும் பக்டீரியாக்களும் இதனால் கொல்லப்படுகின்றன என்றும் வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே மிகவும் அவசியமான சூழ்நிலைகளைத் தவிர, தேவையில்லாமல் குழந்தைகளுக்கு நோயெதிர்ப்பு மருந்துகளை வழங்க வேண்டாம் என்று அவர் பெற்றோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒருவரின் வயது மற்றும் எடை உட்பட பல காரணிகளை கருத்தில் கொண்டே குழந்தைகளுக்கு நோயெதிர்ப்பு மருந்துகளை பயன்படுத்த வேண்டும் என குழந்தைகள் நல மருத்துவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இருமல், சளி மற்றும் சிறு காயங்களுக்கு மருத்துவரின் பரிந்துரைப்படி நோய் எதிர்ப்பு மருந்துகளை பயன்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார்.

No comments: