News Just In

10/13/2023 03:24:00 PM

பணயக்கைதிகளை விடுவிக்கும் வரை காசாவில் ‘முழு முற்றுகை’ தொடரும்! இஸ்ரேல் உறுதி


தொடரும் வான் தாக்குதல்களுக்கு மத்தியில் இஸ்ரேல் உறுதி!




ஹமாஸ் அமைப்பினால் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் அனைத்து பணயக்கைதிகளும் விடுவிக்கப்படும் வரை காசாவில் செயற்படுத்தப்படும் முழு முற்றுகை கைவிடப்படாது என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது.

காசாவில் உள்ள மருத்துவமனைகள் பிணவறைகளாக மாறுவதை தவிர்க்க எரிபொருளைத் தரும்படி செஞ்சிலுவை சங்கம் கோரிக்கை விடுத்த நிலையிலேயே இஸ்ரேல் நேற்று (12) இந்த நிபந்தனையை விடுத்தது.

ஏற்கனவே இஸ்ரேலின் முற்றுகையில் இருக்கும் காசாவில் நீர, மின்சாரம், எரிபொருள் மற்றும் உணவு விநியோகத்தை இஸ்ரேல் கடந்த திங்கட்கிழமை (09) தொடக்கம் துண்டித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை இஸ்ரேலுக்கு ஊடுருவிய பலஸ்தீன போராளிகள் நடத்திய தாக்குதலில் ஆயிரத்துக்கும் அதிகமான யூதர்கள் கொல்லப்பட்ட நிலையில், காசாவில் ஆட்சி புரியும் ஹமாஸ் அமைப்பை அழித்தொழிப்பதாக இஸ்ரேல் உறுதி பூண்டுள்ளது.

No comments: