![](https://cdn.ibcstack.com/article/99d8161b-61bd-4230-826d-2a4d184929c9/23-6529ef5005bf5.webp)
நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று ஆரம்பமாகிறது.
முன்னதாக இரண்டு முறை இந்த ஆரம்ப நிகழ்வு தள்ளி வைக்கப்பட்டது.
இந்தநிலையில், இன்று காலை 7 மணிக்கு இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை காணொளிக்காட்சி மூலம் டெல்லியில் இருந்தபடி இந்திய பிரதமர் நரேந்திரமோடி ஆரம்பித்து வைக்கிறார்.
No comments: