News Just In

10/18/2023 02:43:00 PM

இறக்காமம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற "அகரத்தின் சுவடிகள் - உன்னத கௌரவம் " நிகழ்வு

இறக்காமம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற "அகரத்தின் சுவடிகள் - உன்னத கௌரவம் " நிகழ்வு




(நூருல் ஹுதா உமர்)
இறக்காமம் பிரதேச செயலகத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்திப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட "அகரத்தின் சுவடிகள் - உன்னத கௌரவம் "
உலக ஆசிரியர் தின நிகழ்வு செவ்வாய் கிழமை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.எம். இம்டாட் இன் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், இறக்காமம் பிரதேச செயலக பிரிவில் உள்ள 22 பாலர் பாடசாலைகளில் கடமையாற்றும் 45 ஆசிரியர்களுக்கு அவர்களது அர்ப்பணிப்பான சேவைகளை கௌரவித்து "அகரத்தின் சுவடிகள் - உன்னத கௌரவம் " விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மேலும், பெண்கள் மற்றும் சிறுவர்களின் நலன், பாதுகாப்பு, அபிவிருத்தி மற்றும் அவர்களது வளமான எதிர்காலத்திற்காக அர்பணிப்புடன் சேவையாற்றி மாவட்டத்தில் சிறந்த அர்ப்பணிப்பு மிக்க அரச சேவையாற்றிவருவதனை பாராட்டும் வகையில், பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்திப் பிரிவு உத்தியோகத்தர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வின் பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். றஸ்ஸான் (நளீமி) கலந்து கொண்டதுடன் விஷேட அதிதியாக உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நஸீல் அவர்களும் கலந்து கொண்டார். மேலும்
கௌரவ அதிதிகளாக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல். ஹம்சார், நிருவாக உத்தியோகத்தர் எம்.எம்.எம். தௌபீக், நிருவாக உத்தியோகத்தர் (GN) எச்.பி. இந்திரசிறி பண்டார ஆகியோர்களும், சிறப்பு அதிதியாக மாவட்ட முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ஆர்.எம்.ஏ.பி. சுரஞ்சி விஜேரட்ன ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மேலும் இந்நிகழ்வில், பாலர் பாடசாலை ஆசிரியர்களின் பல்வேறு கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் உலக ஆசிரியர் தின சிறப்பு கேக் அதிதிகளினால் வெட்டப்பட்டு பரிமாறப்பட்டமை குறிப்பித்தக்கது.




No comments: