News Just In

10/13/2023 02:50:00 PM

காசாவை முழுமையாக முற்றுகையிட்டுள்ள இஸ்ரேல்: பரிதவிக்கும் 10 இலட்சம் மக்கள்!இலங்கையின் இறுதிபோரின் ஆரம்ப தருணங்களை நினைவுபடுத்துகின்றன


இலங்கையின் இறுதிபோரின் ஆரம்ப தருணங்களை நினைவுபடுத்துகின்றது 


அடுத்த 24 மணி நேரத்தில் துரிதமாக வெளியேற வேண்டும் என்ற இஸ்ரேலின் எச்சரிக்கையை தொடர்ந்து, வட காசாவில் உள்ள 10 இலட்சம் மக்கள் எங்கு செல்வதென தெரியாமல் பரிதவித்து வருகின்றனர்.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கிடையில் தொடரும் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.

நேற்றைய 6ஆவது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது.




இந்நிலையில், வட காசாவில் உள்ள 10 லட்சம் மக்கள் அடுத்த 24 மணி நேரத்தில் துரிதமாக வெளியேற வேண்டும் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை ஊழியர்கள், ஐக்கிய நாடுகள் சபையின் பள்ளிகள் உள்பட அனைத்து இடங்களில் உள்ள பாலஸ்தீனியர்களை உடனே வெளியேறவும் அறிவுறுத்தியுள்ளது

No comments: