News Just In

5/26/2023 11:42:00 AM

பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு நாட்டில் அறிவார்ந்த அரசியல்வாதிகள் இல்லை என குற்றச்சாட்டு!





நாட்டில் பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பில் முன்வைக்கும் தீர்மானங்களை கேட்பதற்கு பொருத்தமான அரசியல் வாதிகள் இல்லை என இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கம் குற்றஞ்சுமத்தியுள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரிஞ்சிகே இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் அரசாங்கத்திற்கு இலாபத்தை பெற்றுத் தரும் வகையில் வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு மீண்டுமொரு சந்தர்ப்பம் வழங்குமாறு இலங்கையின் வாகன இறக்குமதியாளர்கள் இலங்கை அரசாங்க அதிகாரிகளிடம் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து இருந்தனர்.

இந்த நிலையில் ஜப்பானிய வாகனங்களை இலங்கைக்கு இறக்குமதி செய்யும் நடவடிக்கைகள் மிக விரைவில் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானிய வாகன நிறுவன பிரதிநிதிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துடனுமான கலந்துரையாடலிலே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது,

இதனைத் தொடர்ந்து ஜப்பானிடம் இருந்து உதவி பெறலாம். ஆனால் தமது முன்மொழிவுகளைக் கேட்டு செயற்படும் வகையில் அறிவார்ந்த அரசியல்வாதிகள் நாட்டில் இல்லாதது துரதிர்ஷ்டவசமானது என இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரிஞ்சிகே மேலும் தெரிவித்துள்ளார்

No comments: