News Just In

4/04/2023 05:35:00 PM

இன்று வாழைச்சேனை இந்துக் கல்லூரி தேசிய பாடசாலையில் மேற்கொள்ளப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்!

கல்குடா வலய கல்வி அலுவலக பிரிவில் உள்ள வாழைச்சேனை இந்துக் கல்லூரி தேசிய பாடசாலைக்கு ஆசிரியராக புதிதாக நியமனம் பெற்று வரும் ஆசிரியரின் நியமனத்தை தற்காலிகமாக ரத்து செய்யுமாறு வலியுறுத்தி இன்று செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் பழைய மாணவர் சங்க நிர்வாகத்தினர் ஒன்றிணைந்து இவ் கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டனர்.

இன்று காலை பாடசாலை முன்றலில் கூடியவர்கள் பொருத்தமான ஆசிரியரை நியமனம் செய் பொ.உதயரூபன் எமக்கு வேண்டாம், தற்காலிக நியமனத்தை ரத்துச் செய், 16 பாடசாலைகள் வெளியேற்றிய ஆசிரியர் வேண்டாம் என்பன போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை கையில் எந்தியவாறு கோஷங்களை எழுப்பி பேராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் இறுதியில் கோரிக்கை அடங்கிய மகஜரை பாடசாலை நிர்வாகத்திடம் கையளித்தனர் குறித்த மகஜரில் திரு.உதயரூபன் ஆசிரியர் அவர்கள் எமது பாடசாலைக்கு நியமித்து உள்ளதாக தகவல் அறியபெற்றது மேற்படி ஆசிரியரை பற்றி விசாரித்த போது அவர் மீது பல்வேறு முறைப்பாடுகள் இதுவரையில் பதிவு செய்யப்பட்டு உள்ளது எனவே அதிபர் அவர்களே திரு உதயரூபன் அவர்களது நியமனத்தினை ஒத்தி வைப்பதோடு நிரந்தரமாக ரத்து செய்து வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து பழைய மாணவர்கள் சார்பிலும் கேட்டுகொள்கின்றோம். என அவ் மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எஸ்.எம்.எம்.முர்ஷித் 






No comments: