News Just In

3/28/2023 07:43:00 AM

லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் குறித்த புதிய அறிவிப்பு!

2023 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரை ஜூலை 31 முதல் ஓகஸ்ட் 22 வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

5 அணிகள் பங்குபற்றும் இந்த போட்டியில் ஒவ்வொரு அணிக்கும் 20 வீரர்கள் உள்ளடக்கப்படுவார்கள் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த போட்டியில் ஒவ்வொரு அணியிலும் 6 வெளிநாட்டு வீரர்கள் இடம்பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: