News Just In

3/28/2023 07:52:00 AM

ஜனாதிபதி ரணிலுக்கு சாணக்கியன் விடுத்துள்ள எச்சரிக்கை!

தேர்தல்களை பிற்போட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளில் கை வைத்தால் மக்கள் எந்த வழியில் தமது உரிமைகளை உறுதிப்படுத்த முனைவார்கள் என்பதை ஜனாதிபதி சிந்தித்து செயற்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டங்களை நடத்தாது மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டங்களை நடாத்துவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் முன்னெடுத்து வருகின்றார்.

பொதுமக்களின் நன்மைகருதியில்லாமல் அவர் ஏதாவது காணியை விற்பனை செய்வதற்கே அவசரமாக மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தினை கூட்டுவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் குற்றம்சுமத்தியுள்ளார்.

No comments: