News Just In

2/18/2023 05:57:00 PM

இன்றிரவு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய இடங்கள்!

இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களின் சில இடங்களில் இன்று (18) மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, நாளை (19) நாட்டில் மழையுடனான வானிலையில் சிறிது அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் நாளை சில இடங்களில் மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: