News Just In

2/18/2023 10:56:00 AM

சிறுவர்களுக்கு போசாக்கை அதிகரிக்கும் திட்டம்!

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினையினால் மாணவர்களின் போஷாக்கு குறைபாடு காணப்படுகின்றது சிறுவர்களின் போஷாக்கினை அதிகரிப்பதற்காக ஓட்டமாவடி பிரதேச செயலகத்தினால் பல்வேறு வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் ஓட்டமாவடி அஸ் ஸலாஹியா முன்பள்ளி பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு போஷாக்கான உணவுகளை வழங்குவதில் பொருளாதார பிரச்சினை உள்ளதாகவும் குறித்த பிரச்சினைக்கான தீர்வை பெற்றுத்தருமாறும் கோரியதற்கிணங்க அஸ்ஸலாஹியா முன்பள்ளி நிருவாகம் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகம் ஊடாக வன்னி ஹோப் தன்னார்வ நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.

அந்தவகையில் அஸ்ஸலாஹியா முன்பள்ளிக்கு வாரத்தில் மூன்று நாட்களுக்கு போஷாக்கான உணவை வழங்குவதற்காக 250,000 ரூபாய் நிதி உதவியை வன்னி ஹோப் இன்று (17.02.2023) வழங்கி வைத்தது.
இந்நிகழ்வில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக கணக்காளர் எம்.ஐ.எஸ். சஜ்ஜாத் அஹமட், வன்னி ஹோப் -இலங்கை பணிப்பாளர் எம்.டி.எம். பாரிஸ், அமைப்பின் கள உத்தியோகத்தர் ரதிகலா, ஊடக இணைப்பாளர் பி. வஸீம், பிரதேச செயலக சுதேச வைத்திய அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எம்.எம். நஜீம், அஸ்ஸலாஹியா முன்பள்ளி ஆசிரியைகள் மற்றும் அதன் நிருவாக உறுப்பினர்களும் கலந்து கொணடனர்.

எஸ்.எம்.எம்.முர்ஷித் 

No comments: