News Just In

2/21/2023 03:17:00 PM

மனநோயாளிகளே 13இற்கு எதிராகக் கொதித்தெழுகின்றனர் : சந்திரிகா!



அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராகக் கொதித்தெழும் நாடாளுமன்ற உறுப்பினர்களை மனநோயாளிகள் என்றே சொல்ல வேண்டும், முதலில் அவர்கள் நாட்டிலுள்ள சட்டங்களின் பரிந்துரைகளை முழுமையாக வாசிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

13ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வெளியிட்டு வரும் கருத்துகளுக்குப் பதில் வழங்கும் போதே சந்திரிகா இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 1987ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் காரணமாக 13ஆவது திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தது.

இலங்கை நாடாளுமன்றத்தின் அனுமதியுடனே இந்தத் திருத்தச் சட்டம் நடைமுறையில் உள்ளது. ஆனால், இந்தத் திருத்தச் சட்டத்தில் உள்ள பரிந்துரைகள் இதுவரை முழுமையாக நடைமுறையாக்கவில்லை.

அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். அதிகாரங்களைப் பகிராமல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது என தெரிவித்துள்ளார்.

No comments: