News Just In

12/26/2022 06:06:00 PM

ஜெய்சங்கரை கொழும்புக்கு அழைத்த இலங்கை அரசு!





பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி இடம்பெறவுள்ள இலங்கையில் 75ஆவது சுதந்திர தின தேசிய நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வதற்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தியோகபூர்வ அழைப்பிதழை அரசாங்கம் டெல்லிக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில் பெரும்பாலும் இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கையின் சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்வாரென டெல்லி தகவல்கள் குறிப்பிடுகின்றன.

No comments: