News Just In

11/11/2022 06:56:00 PM

ஜனாதிபதி ரணில் வருகைக்காக நாடாளுமன்றத்தில் விசேட சோதனை!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதியமைச்சர் என்ற வகையில் எதிர்வரும் 14 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் வரவு செலவுத்திட்டத்தை தாக்கல் செய்ய உள்ளார்.

வரவு செலவுத்திட்டம் தாக்கல் செய்யப்படவுள்ளதை முன்னிட்டு, கடந்த வருடங்களில் போன்று இந்த வருடமும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய நடவடிக்கை எடுக்க உள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் நாளைய தினம் வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வு அறைகள், அலமாரிகள் உட்பட நாடாளுமன்ற வளாகத்தை பாதுகாப்பு தரப்பினர் சோதனையிடவுள்ளனர்.

வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படும் எதிர்வரும் 14 ஆம் திகதி நாடாளுமன்ற பார்வையாளர்கள் அரங்கில் ராஜதந்திர விருந்தினர்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும்.

அன்றைய தினம் நாடாளுமன்ற வாகன தரிப்பிடம் மூடப்படும் என்பதால், நாடாளுமன்றத்திற்கு வரும் உறுப்பினர்கள் முடிந்தளவில் சாரதிகளை அழைத்து வருமாறும் சபாநாயகர், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளார்.

இதனை தவிர நாடாளுமன்றத்திற்கு வெளியிலும் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: