News Just In

11/10/2022 02:51:00 PM

பெண்ணை மூச்சடைக்க செய்த தனுஷ் குணதிலக்க - வழக்கில் இருந்து விலகிய சட்டத்தரணி!






இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க தன்னை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்த போது, தன்னை சில முறை மூச்சடைக்க செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சுமத்தியுள்ளதாக சிட்னி நீதிமன்றம் வெளியிட்டுள்ள ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
20 முதல் 30 வினாடிகள் பெண்ணின் கழுத்தை இறுக்கிய தனுஷ்க குணதிலக்க

நியூ சவுத் வேல்ஸ் பொலிஸ் தகவல்களுக்கு அமைய, சம்பந்தப்பட்ட பெண்ணின் வீட்டில் தனுஷ்க குணதிலக்க பலவந்தமாக பாலியல் ஸ்பரிசம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன் அப்போது, அவர் பெண்ணின் கழுத்தில் ஒரு கையை வைத்து 20 முதல் 30 வினாடிகள் கழுத்தை இறுக்கினார் என கூறப்பட்டுள்ளது.

இந்த பாலியல் பலாத்காரம் சம்பந்தமாக பெண் துஷ்பிரயோக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது.
நேற்று நடைபெற்ற தனுஷ்க குணதிலக்கவின் வழக்கு தொடர்பாக சிட்னி மோர்னிங் ஹெரல்ட் பத்திரிகை இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

No comments: