News Just In

11/29/2022 07:39:00 AM

தீயில் எரிந்து கருகியது பேருந்து- தீவிர விசாரணையில் காவல்துறை!

மினுவாங்கொடை நகரின் மையப்பகுதியில் உள்ள பிரதான வங்கிக்கு பின்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு பேருந்து ஒன்று நேற்று மதியம் தீயில் எரிந்து நாசமானது.

பேருந்தில் ஏற்பட்ட தொழிநுட்பக் கோளாறே தீ விபத்துக்குக் காரணம் என இதுவரை மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக மினுவாங்கொடை காவல்துறையினர் தெரிவித்தனர்.

பேருந்தில் ஏற்பட்ட தீயினால் தனியார் வங்கியின் கட்டடம் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

பேருந்திற்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் பேருந்தின் உரிமையாளர்கள் இதுவரை காவல்துறையினருக்கு அறிவிக்கவில்லை எனவும், பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் மினுவாங்கொடை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

No comments: