News Just In

11/07/2022 04:46:00 PM

திடீர் சுகயீனமடைந்த பல்கலை மாணவர்கள் பலர் வைத்தியசாலையில்! திருமலையில் சம்பவம்




கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தைச் சேர்ந்த 36 மாணவர்கள் திடீர் சுகயீனம் காரணமாக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு வாந்தி, வயிற்றோட்டம் போன்ற நோய் நிலைமைகளை கொண்டிருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாதிக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, உணவு ஒவ்வாமை காரணமாக குறித்த மாணவர்கள திடீர் சுகயீனமடைந்திருக்கலாம் என்று வைத்தியர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

No comments: