News Just In

10/11/2022 07:35:00 AM

உன்னிச்சை, சிறிய நீர்ப்பாசனத் திட்டங்கள் தொடர்பிலான கூட்டத்தினை புறக்கணித்த ஆளும் தரப்பு எம்.பிக்கள் - சாணக்கியன் விசனம்!

பெரும்போகப் பயிர்ச்செய்கை ஆரம்பக் கூட்டம் மண்முனை மேற்கு வவுணதீவில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.

உன்னிச்சை, சிறிய நீர்ப்பாசனத் திட்டங்கள் தொடர்பில் இதன்போது அதிகளவில் அவதானம் செலுத்தப்பட்டிருந்தது.

எனினும், இன்றைய குறித்த கூட்டத்தினை அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்திருந்தமை பெரும் விசமர்சனங்களை தோற்றுவித்துள்ளது.

இந்தநிலையில் இதுதொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனும் கடும் விமர்சனங்களை வெளியிட்டுள்ளார்.


No comments: