News Just In

10/07/2022 11:22:00 AM

நற்பிட்டிமுனை லாபிர் வித்தியாலய மாணவி தேசிய மட்டத்திற்கு தெரிவு !




(நூருல் ஹுதா உமர்)
திருகோணமலை - கந்தளாய் லீலாரத்ன பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் நடைபெற்ற 16 வயதிற்குட்பட்டவர்களுக்கான பரிதிவட்டம் வீசும் போட்டியில் நற்பிட்டிமுனை லாபிர் வித்தியாலயத்தில் தரம்-10 இல் கல்வி பயிலும் அமிறுன் பாத்திமா அஸ்தா எனும் மாணவி 21.47 மீட்டர் தூரம் எறிந்து இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப்பதக்கத்தை வென்றதுடன் தேசிய மட்ட போட்டிக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


No comments: