News Just In

9/11/2022 07:11:00 AM

கராத்தே சம்மேளத்தின் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு!

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஓட்டமாவடி மத்திய கல்லூரியின் கராத்தே சம்மேளத்தின் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும், புதியவர்களை வரவேற்கும் நிகழ்வும் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

ஓட்டமாவடி மத்திய கல்லூரியின் அதிபர் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண விளையாட்டுத் துறையின் மாகாணப் பணிப்பாளர் என்.எம்.நௌபீஸ், ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர், ஓட்டமாவடி கோட்டக் கல்வி பணிப்பாளர் வி.ரீ.அஜ்மீர், சட்டத்தரணிகளான எம்.எம்.எம்.ராசிக், ஹபீப் றிபான், ஹயா சர்வதே கல்லூரி பணிப்பாளர் ஏ.எல்.நஜிமுதீன், வாழைச்சேனை பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி ஈ.எல்.பதுர்தீன் பாடசாலையின் கராத்தே பயிற்றுவிப்பாளர் மௌலவி ஏ.ஆர்.நவாஸ், சமுக செயற்பாட்டாளர்களான ஏ.எல்.ஜூனைட் நளீமி, எம்.பி.எம்.முஸம்மில், ஐ.எல்.எம்.ஜமால்டீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது ஓட்டமாவடி மத்திய கல்லூரியின் கராத்தே சம்மேளத்தின் கீழ் பயிற்சி பெறும் மாணவர்கள் பாடசாலை, மாவட்டம், மாகாணம், தேசிய மட்டங்களில் கராத்தே போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவர்கள் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அத்தோடு கல்லூரியின் கராத்தே சம்மேளத்தின் கீழ் பயிற்சி பெறும் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும் இடம்பெற்றதுடன், கல்லூரி அதிபர் மற்றும் நிருhகத்தினரால் பிரதம அதிதி கிழக்கு மாகாண விளையாட்டுத் துறையின் மாகாணப் பணிப்பாளர் என்.எம்.நௌபீஸ் மற்றும் அதிதிகள் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

எஸ்.எம்.எம்.முர்ஷித்

No comments: