News Just In

7/18/2022 07:47:00 PM

அரசியலில் களமிறங்கியது போராட்டக் குழு..! ஆரம்பிக்கப்பட்ட புதிய கட்சி!

அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் “மக்கள் போராட்ட பிரஜைகள்” என்ற புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கட்சியை பதிவு செய்வதற்கான ஆவணங்களை அவர்கள் இன்று(18) தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரிடம் கையளித்துள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கபெற்றுள்ளன.

எத்தகைய சவால்களுக்கு முகங்கொடுத்தாலும் நாட்டின் வளர்ச்சிக்காகவும் மக்களின் வளர்ச்சிக்காகவும் அனைத்தையும் செய்வோம் என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மக்கள் போராட்ட பிரஜைகள் கட்சியின் செயலாளராக சானக பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.

போராட்டத்தை துஷ்பிரயோகம் செய்ய சில குழுவினர் முயற்சிப்பதாகவும், மக்களின் அபிலாஷைகளுக்காக தொடர்ந்தும் குரல் கொடுப்பதாகவும் சானக பண்டார தெரிவித்துள்ளார்.

No comments: