News Just In

7/06/2022 05:56:00 PM

வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட ஒரு தொகை சிகரட் மற்றும் விஸ்கி போத்தல்கள் சிலவற்றுடன் மூவர் கைது!

நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கொழும்பு பெகலியகொட பிரதேசத்தில் இராணுவ புலனாய்வு பிரிவினரின் (MIC) தகவலுக்கமைய புலனாய்வு பிரிவினருடன் விசேட அதிரடிப்படையினரும் (STF) இணைந்து சட்டவிரோதமாக வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட Manchester சிகரட் நாற்பதாயிரம் (40000) மற்றும் விஸ்கி போத்தல்கள் சிலவற்றுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இக் கடத்தல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எஸ்.எம்.எம்.முர்ஷித்

No comments: