News Just In

7/31/2022 08:46:00 PM

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு அதி நவீன கண் சத்திர சிகிச்சை செய்யும் உபகரணம் வழங்கிவைப்பு !

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் கண் சத்திர சிகிச்சை பிரிவின் வசதிகளை மேம்படுத்தும்வகையில் அதி நவீன கண் சத்திர சிகிச்சை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

சம்மாந்துறை பொதுமக்களின் முழுமையான நிதிப்பங்களிப்புடன் சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை, மஜ்லிஷ் அஷ்ஷூரா, உலமா சபை என்ற முச்சபைகளின் வழிகாட்டலின் கீழ் பொதுமக்களினால் அன்பளிப்பாகவழங்கப்பட்ட 1 கோடிக்கு மேற்பட்ட நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட கண் சத்திர சிகிச்சைஉபகரணங்களை உத்தியோக பூர்வமாக கையளிக்கும் நிகழ்வு வைத்தியசாலை அபிவிருத்தி குழுவின்தலைவர் வைத்தியர் ஏ. இஸ்ஸடீன் தலைமையில் வைத்தியசாலை வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்த்தன பிரதம அதிதியாககலந்துகொண்டு உபகரணத்தொகுதியை வைத்தியசாலையின் கண் சத்திர சிகிச்சை பிரிவிற்குஉத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் கிழக்குமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.ஆர்.எம். தௌபீக்,கல்முனைப்பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்

ஐ.எல்.எம் றிபாஸ், பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அப்துல் வாஜித், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் அஸாத் எம்ஹனிபா,முச்சபைகளின் பிரதிநிதிகள் உலமாக்கள், பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகள், பிரதேச சபைஉறுப்பினர்கள், வைத்தியசாலை அபிவிருத்தி குழுவின் உறுப்பினர்கள் வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள்,தாதியர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் மற்றும் பள்ளிவாசல் பிரதிநிதிகள் உள்ளிட்டபலர் கலந்துகொண்டனர்.

சம்மாந்துறை நிருபர் .எல்.எம் நாஸிம்

No comments: