News Just In

7/06/2022 01:15:00 PM

நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் 19 மாணவர்கள் மாகாண மட்டத்திற்கு தெரிவு





நூருல் ஹுதா உமர்

2022 கல்முனை வலய மட்ட மெய்வல்லுனர் போட்டிகளில் 15 தங்கப்பதக்கம் மற்றும் 09 வெள்ளிப்பதக்கம் வென்று மொத்தமாக 19 மாணவர்கள் மாகாண மட்டப்போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2022.07.04 மற்றும் 05 ஆகிய இரண்டு நாட்களாக கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை மைதானத்தில் இடம்பெற்ற கல்முனை வலயமட்ட மெய்வல்லுனர் விளையாட்டு போட்டிகளில் நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை 16 வயதுப்பிரிவு மாணவன் எம்.அப்ஸீத் அஹமட் சம்பியன் பட்டம் பெற்று மாகாண மட்டப் போட்டிகளுக்கு தெரிவாகியுள்ளார்.


No comments: