News Just In

6/12/2022 05:14:00 PM

முல்லைத்தீவில் இந்து ஆலயம் இருந்த இடத்தில் புதிய அவதாரம் எடுக்கும் புத்தர் சிலை!

இராணுவத்தின் பூரண ஏற்பாட்டில் முல்லைத்தீவு, குமுளமுனை குருந்தூர்மலையில் நீதிமன்ற கட்டளைக்கு மாறாக அமைக்கப்பட்டுவரும் குருந்தாவசோக புராதன விகாரையில் கபோக் கல்லினால் செதுக்கப்பட்ட புத்தர் சிலை பிரதிஸ்டை செய்யும் நிகழ்வும் விசேட பூசை வழிபாடுகளும் இன்று காலை ஒன்பது மணிக்கு நூறுக்கணக்கான பௌத்த பிக்குகளின் பங்கேற்புடனும், இராணுவம் பொலிஸ் ,விமானப்படை ,கடற்படையினரின் பங்கேற்புடனும் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை நீதிமன்ற உத்தரவை புறம்தள்ளி அமைக்கப்பட்டு வரும் விகாரையில் புத்தர் சிலை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், குருந்தூர்மலையில் தமிழ் மக்களின் வழிபாட்டு உரிமையை வலியுறுத்தியும் எதிர்ப்பு போராட்டம் ஒன்றை நாளை காலை முன்னெடுக்க தமிழ் மக்கள் எதிர்ப்பினைக் காட்டினர்.

இன்றைய நிகழ்வுக்காக நூற்றுக்கணக்கான இராணுவ வாகனங்கள் குருந்தூர் மலைக்கு அழைத்து வரப்பட்டனர், குமுளமுனை தண்ணிமுறிப்பு வீதி கடந்த சில நாட்களுக்கு முன்னர் இராணுவத்தால் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இன்றைய நிகழ்வில் பௌத்த பிக்குகள் , தென்பகுதி மக்கள் இராணுவம், பொலிஸ்,விமானப்படை,கடற்படை உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் பங்கேற்கவுள்ளதாக அறியமுடிகிறது.

No comments: