News Just In

6/12/2022 05:24:00 PM

தொடருந்து பெட்டிக்குள் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!!

ரம்புக்கனை புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புகையிரதத்தின் பெட்டிக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இயக்கத்தை தொடங்குவதற்கு முன்னர், புகையிரத சாரதி உதவியாளரின் வழக்கமான பரிசோதனையின் போது அதிகாலை 4:40 மணியளவில் பெட்டிக்குள் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரிடமிருந்து பொல்கஹவெலயிலிருந்து பண்டாரவளை வரையிலான புகையிரத பயணச்சீட்டும் காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

எனினும் சடலம் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், தற்கொலையா கொலையா என்பது தொடர்பில் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments: