News Just In

6/22/2022 06:45:00 AM

கண்டி தொடருந்து மார்க்கத்தின் சுதுகம்பொல கடவை ஊடான வாகன போக்குவரத்துக்கு நாளை தடை!

கண்டி தொடருந்து மார்க்கத்தின் சுதுகம்பொல கடவை ஊடான வாகன போக்குவரத்துக்கு நாளை தடை விதிக்கப்படவுள்ளது.

நாளை காலை 7 மணி முதல் நாளை மறுதினம் காலை 8 மணி வரை வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுதுகம்பல தொடருந்து நிலையத்தின் பாதுகாப்பு கடவையில் முன்னெடுக்கப்படவுள்ள திருத்தப்பணிகள் காரணமாக இந்த போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், குறித்த காலப்பகுதியில் கண்டி வரையான தொடருந்து சேவை வழமையாக இடம்பெறும் என தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

No comments: