News Just In

6/20/2022 07:33:00 PM

சுகாதார ஊழியர்களுக்கு பிரத்யேகமாக எரிபொருள்




நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பிரச்சினை சுகாதார துறையினரை பெரிதும் பாதித்துள்ளது.

இந்நிலை தொடருமாக இருந்தால் சுகாதார துறை முடக்க வேண்டிய நிலையேற்படும் எனவும் அதிகாரிகள் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வருகின்றனர்.

சுகாதாரப் பணியாளர்களுக்கு எரிபொருள் கொடுப்பனவு

எனவே, மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தகுதியான சுகாதாரப் பணியாளர்களுக்கு பிரத்தியேகமாக எரிபொருள் கொடுப்பனவு ஒதுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இது அத்தியாவசிய சேவை பணியாளர்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்ற பெரிதும் உதவும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments: