அரசியல் பிரமுகர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இந்தியாவிற்கு தப்பிச் சென்றதாக எழுந்த வதந்திகளை இந்திய உயர் ஸ்தானிகராலயம் கடுமையாக மறுத்துள்ளது.
இலங்கையின் சில அரசியல் பிரமுகர்கள் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளதாக சமூக ஊடகங்களில் பரவலாக செய்திகள் பிரவிவருகின்றன.
இந்நிலையில், இதுகுறித்து இந்திய உயர் ஸ்தானிகராலயம் தனது டுவிட்டர் தளத்தில் கருத்தொன்றை பதிவிட்டுள்ளது.
குறித்த பதிவில், "குறிப்பிட்ட சில அரசியல்வாதிகளும் அவர்களின் குடும்பங்களும் இந்தியாவுக்கு சென்றிருப்பதாக ஊடகங்கள் சிலவற்றிலும், சமூக ஊடகங்களிலும் வதந்திகள் பரவுவதனை உயர் ஸ்தானிகராலயம் அவதானித்துள்ளது.
இவை போலியானதும் அப்பட்டமான பொய்யானதுமான அறிக்கைகளாக உள்ளதுடன் எந்தவிதமான உண்மைகளோ அல்லது அர்த்தங்களோ இல்லாதவை. இவ்வாறான செய்திகளை உயர் ஸ்தானிகராலயம் கடுமையாக மறுக்கின்றது", எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments: