News Just In

5/11/2022 07:48:00 AM

மறு அறிவித்தல் வரை அனைத்து ரயில் சேவைகளும் இடைநிறுத்தம்!

மறு அறிவித்தல் வரை அனைத்து ரயில் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் (ஜிஎம்ஆர்) நேற்று அறிவித்துள்ளார்.

அதன்படி, நேற்று இரவு முதல் அனைத்து இரவுநேர தபால் சேவை ரயில்களும் நிறுத்தப்பட்டன.

காவல்துறை ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு, மறு அறிவித்தல் வரை அனைத்து ரயில்சேவைகளையும் இடைநிறுத்த ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

நாட்டில் பல்வேறு இடங்களிலும் அரசுக்கெதிரான அமைதி வழி போராட்டங்கள் தற்போது வன்முறை சம்பவங்களாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: