News Just In

5/10/2022 06:01:00 PM

நாட்டு மக்களுக்கு சற்று முன் ஜனாதிபதி வழங்கியுள்ள செய்தி!

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சற்று முன் அறிவிப்பொன்றை வழங்கியுள்ளார்.

அதன்படி வன்முறைகள் மற்றும் பழிவாங்கும் செயல்களை நிறுத்துமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் அமைதியாக இருக்குமாறும் பொதுமக்களிடம் ஜனாதிபதி வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்திலிட்டுள்ள பதிவில் ஜனாதிபதி மக்களுக்கு இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.


மேலும், பொருளாதார நெருக்கடி தீர்விற்கு அரசியலமைப்பின் ஆணைக்கு அமைய பொது இணக்கப்பாட்டு ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments: