புனித நோன்பு காலத்தை முன்னிட்டு சுமார் 100 குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டதாக நிவாரண விநியோக ஏற்பாட்டாளரும் ஏறாவூர் நகர சபையின் உறுப்பினரும் கிழக்கு மாகாண சபை முன்னாள் அமைச்சருமான எம்.எஸ். சுபைர் தெரிவித்தார்.
அரிசி கோதுமை மாவு சீனி தகரத்தில் அடைக்கப்பட்ட மீன் தேயிலைத் தூள் பேரீச்சம் பழம் உட்பட உலருணவுகள் அடங்கிய தலா 5 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொதிகள் ஞாயிற்றுக்கிழமை 10.04.2022 ஏறாவூரில் வழங்கி வைக்கப்பட்டன.
கொடை வள்ளல் டத்தோ ஹாஜி ராஸிப் அப்துல்லாஹ்வின் நிதி அனுசரணையில் ஆஷிபா பௌண்டேஷனின் ஏற்பாட்டில் இந்த உலர் உணவு நிவாரணப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.
ஏறாவூர் அல் மத்ரசதுல் முஹம்மதிய்யா அறபுக் கல்லூரியில் இடம்பெற்ற இந்த உலருணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வில் கொடை வள்ளலும் மார்க்க அறிஞரும் அரசியல்வாதியுமான காலஞ்சென்ற ஹஸன் மௌலவியின் ஞாபகார்த்தமாக பிரார்த்தனை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வுகளில் கொடை வள்ளல் ஹஸன் மௌலவின் புதல்வன் சாதிக் ஹஸன் உட்பட மார்க்க அறிஞர்கள் பள்ளிவாசல்களின் கதீப்மார் பயனாளிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
No comments: